என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "random number"

    • 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஆன்லைனில் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 20-ம் தேதி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

    இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.

    இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.

    விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

    மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

    பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்விற்காக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்தவாறு கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

    முதன் முதலாக இந்த வருடம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ள நிலையில் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

    ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ‘ரேண்டம்’ எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

    பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்களை தேர்வு செய்வதற்கு கணிதம், இயற்பியல் மற்றும் 4-வது விருப்பப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் பிறந்த தேதிக்கு பிறகு 5-வது காரணியாக இந்த சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படுகிறது. இது 10 இலக்குகளை கொண்டதாகும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும்.

    ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மூலமாக வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. #AnnaUniversity
    ×