என் மலர்
நீங்கள் தேடியது "Engineering student admission"
பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்று ஆன்லைன் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 150 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பொறியியல் மாணவர் கலந்தாய்வு இந்த வருடம் முதன் முதலாக ஆன்லைனில் நடைப்பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. 5 சுற்றுக்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் அரசின் உதவி மையங்கள் மூலமாக கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளன.
2 சுற்றுகளுக்கும் 200 முதல் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 12,206 பேர் கல்லூரியை தேர்வு செய்து ஆன்லைனில் ஒதுக்கீடு ஆணையை பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்துறை கல்லூரிகளான குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் 97 சதவீத இடங்களும், கிண்டி பொறியியல் கல்லூரியில் 96 சதவீத இடங்களும், அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 93 சதவீத இடங்களும் நிரப்பியுள்ளன. தனியார் கல்லூரிகளை பொறுத்தமட்டில் சென்னை எஸ்.எஸ்.என்.கல்லூரியில் 91 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. வழக்கமாக கலந்தாய்வு தொடங்கிய அடுத்த சில நாட்களில் புகழ் பெற்ற கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பி விடும்.
ஆனால் இந்த வருடம் அத்தகைய நிலை காணப்படவில்லை. 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அந்த வரிசையில் புகழ்பெற்ற கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உணர்ந்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக 40 கல்லூரிகளில் 30 சதவீத இடங்களும், 70 சதவீத கல்லூரிகளில், 10 சதவீத இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.
இனி நடைபெற உள்ள சுற்றுகளிலும் இதே நிலை தொடர்ந்தால் 200 கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் கூட நிரம்புவது கடினம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வருவதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு 175 முதல் 150 வரை கப்- ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் மாணவர் கலந்தாய்வு இந்த வருடம் முதன் முதலாக ஆன்லைனில் நடைப்பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. 5 சுற்றுக்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் அரசின் உதவி மையங்கள் மூலமாக கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளன.
2 சுற்றுகளுக்கும் 200 முதல் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 12,206 பேர் கல்லூரியை தேர்வு செய்து ஆன்லைனில் ஒதுக்கீடு ஆணையை பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்துறை கல்லூரிகளான குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் 97 சதவீத இடங்களும், கிண்டி பொறியியல் கல்லூரியில் 96 சதவீத இடங்களும், அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 93 சதவீத இடங்களும் நிரப்பியுள்ளன. தனியார் கல்லூரிகளை பொறுத்தமட்டில் சென்னை எஸ்.எஸ்.என்.கல்லூரியில் 91 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. வழக்கமாக கலந்தாய்வு தொடங்கிய அடுத்த சில நாட்களில் புகழ் பெற்ற கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பி விடும்.
ஆனால் இந்த வருடம் அத்தகைய நிலை காணப்படவில்லை. 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அந்த வரிசையில் புகழ்பெற்ற கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உணர்ந்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக 40 கல்லூரிகளில் 30 சதவீத இடங்களும், 70 சதவீத கல்லூரிகளில், 10 சதவீத இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.
இனி நடைபெற உள்ள சுற்றுகளிலும் இதே நிலை தொடர்ந்தால் 200 கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் கூட நிரம்புவது கடினம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வருவதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு 175 முதல் 150 வரை கப்- ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. #AnnaUniversity
சென்னை:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்விற்காக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்தவாறு கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
முதன் முதலாக இந்த வருடம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ள நிலையில் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ‘ரேண்டம்’ எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.
பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்களை தேர்வு செய்வதற்கு கணிதம், இயற்பியல் மற்றும் 4-வது விருப்பப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் பிறந்த தேதிக்கு பிறகு 5-வது காரணியாக இந்த சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படுகிறது. இது 10 இலக்குகளை கொண்டதாகும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மூலமாக வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. #AnnaUniversity
என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்விற்காக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்தவாறு கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
முதன் முதலாக இந்த வருடம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ள நிலையில் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ‘ரேண்டம்’ எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.
பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்களை தேர்வு செய்வதற்கு கணிதம், இயற்பியல் மற்றும் 4-வது விருப்பப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் பிறந்த தேதிக்கு பிறகு 5-வது காரணியாக இந்த சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படுகிறது. இது 10 இலக்குகளை கொண்டதாகும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மூலமாக வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. #AnnaUniversity






