search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail picket struggle"

    1953-ம் ஆண்டு ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதானவருக்கு முக ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.



    இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #MKStalin
    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து ரெயிலை மறித்த பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    மார்க்கம்யூனிஸ்டு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க அவசர சட்டம் இயற்றி அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

    வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

    கம்யூனிஸ்டு கட்சியினருடன் தலித் அமைப்புகளும் சேர்ந்து இந்த மறியலில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் காளைமாடு சிலை அருகே இவர்கள் குவிந்தனர்.

    மாநகர செயலாளர் ரகுராமன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகட்சி அமைப்பு செயலாளர் விநாயக மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாநகர செயலாளர் அம்ஜத்கான், ஜாபர் அலி, பைசல் அகமது.

    தமிழ்புலிகள் மாநில பொது செயலாளர் இளவேனில் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கோபால் உள்பட 75 பெண்கள் உள்பட 350 பேர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை முழங்கியபடி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    ரெயில் நிலையம் முன் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாத வண்ணம் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், எட்டியப்பன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இருந்தனர்.

    ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் பேரி கார்டை தள்ளிவிட்டு ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

    3-வது பிளாட் பார்முக்கு சென்ற அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கோவை- ஈரோடு பயணிகள் ரெயில் முன் என்ஜினில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலர் தண்டவாளத்திலும் ரெயிலை மறித்து அமர்ந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 350 பேரும் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    ×