search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purchase of copra"

    • கோவையில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடக்கிறது.
    • நடப்பாண்டு 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் ஆண்டுதோ றும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரி, சூலூர், தொண்டாமுத்தூர், காரமடை, கோவை ராமநாதபுரம் ஆகிய 10 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விற்பனை செய்து பயன் பெற வேண்டும் என்று வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கோவை வேளாண் விற்பனை குழு முதுநிலை மேலாளர் சாவித்ரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 6 மாத காலத்துக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டு 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து அரவை கொப்பரை ரூ.108,60-க்கும், பந்து கொப்பரை ரூ.117-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரைகளை வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
    • 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், அன்னூர் தாலுகாவில் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தமிழக அரசு அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க கடந்த மாதம் 3-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து ஜூன் 5-ந் தேதி முதல் இங்கு கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்தனர்.

    இந்த மையத்தில் 357 விவசாயிகள் 4,68,500 கிலோ கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    வெளிச்சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ.80க்கு மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் அரசு ஒரு கிலோ கொப்பரை 105 ரூபாய் 90 காசுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.தேங்காய் கொப்பரை கொள்முதலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×