என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public dharna"

    • பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
    • வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் எம்.ஜி.ஆர். நகர் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    கூடலூா் நகராட்சியில் உள்ள எம்.ஜி.ஆா்.நகரில் நாங்கள் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக குடியி ருந்து வருகி றோம். நாங்கள் நகராட் சிக்கு தொடா்ந்து வரி செலுத்தி வருகிறோம். குடியி ருக்கும் முகவரியில் ரேஷன் காா்டு, வாக் காளா் அடையாள அட்டை, ஆதாா் காா்டு வழங்கப் பட்டுள்ளது.

    ஆனால் பிரிவு-17 நிலப் பிரச் னையை காரணம் காட்டி இது வரை வீடு களுக்கு மின் இணைப்பு மட்டும் வழங்கப் படவில்லை.

    மின் இணைப்பு இல்லா ததால் குழந்தை களின் கல்வி பாதிக்கப் படுகிறது.

    விளக்கு களை எரிய வைக்க மண் எண்ணையும் கிடைப் பதில்லை. வீட்டில் விளக்கு எரிக்க டீசலை வாங்கி பயன் படுத்தி வருகிறோம். இதனால் பல்வேறு பிரச் சனைகளை சந்திக்க வேண்டி யுள்ளது.

    எனவே, குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற வலி யுறுத்தி தர் ணாவில் ஈடுபட் டுள்ளோம் என்றனா்.

    • டிராக்டர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பொய்கை அடுத்த கந்தனேரியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு டிராக்டர் மூலம் தினமும் மணல் அள்ளப்படுகிறது.

    மணல் குவாரி

    மேலும் மணல் அள்ளும் போது குடியாத்தத்திற்கு செல்லும் கூட்டு குடிநீர் பைப் லைனும் உடைக்கப்பட்டது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் உடனடியாக மணல் குவாரியை நிறுத்த வேண்டுமென அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் ஆத்திர மடைந்த ஐதர்புரம் கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.

    அங்கு மணல் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர்களை சிறை பிடித்து, மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் பாலாற்றில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை.
    • கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி க்குட்பட்ட 55-வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு , வீடு இல்லாமல் வாழ்விடத்திற்காக குடி பெயர்ந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 38 ஆண்டு காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


    தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×