search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private company officer"

    • சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த பூலக்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31).

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவன த்தில் இளநிலை அலுவல ராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரண்யா (23) என்ற மனைவும், 2 மகன்க ளும் உள்ளனர்.

    இந்நிலையில் சதீஷ்குமார் பவானியில் உள்ள அவரது பெற்றோரையும் கவனித்து வந்தார். மேலும் நண்பர்களு க்கு அடிக்கடி பண உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாகவும் மேலும் சதீஷ்குமாருக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி இருந்து வந்தது.

    இதையடுத்து பணம் இல்லாததால் சதீஷ்குமார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். மேலும் கடன் அதிகமான தால் சதீஷ்குமார் மன வரு த்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் இருக்கும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து மருத்துவமனைக்கு அழை த்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து மனைவி சரண்யா மகனை அழைத்துக் மருத்துவ மனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்புறமாக மூடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதையடுத்து சரண்யா உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சதீஸ் குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் நிறுவன அதிகாரியை மர்ம நபர்கள் காருடன் கடத்தி அவரிடம் இருந்த செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர்.

    சிவகங்கை:

    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர்தாஸ் (வயது33). இவர் பிரபல கார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று தனது காரில் வெளியில் சென்று விட்டு இரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென காரை மறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கர்தாசை சரமாரியாக தாக்கியது. கை-கால்களை கயிற்றால் கட்டி காரின் பின் இருக்கையில் போட்டு காருடன் அவரை கடத்தினர்.

    சங்கர்தாசிடம் இருந்து செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக்கொண்டனர். பின்னர் மயக்கத்தில் இருந்த அவரை மதுரை மாவட்டம் பொட்டச்சிபட்டி அருகே அந்த கும்பல் கீழே தள்ளி விட்டு காருடன் தப்பியது.

    மயங்கி கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுய நினைவு திரும்பிய சங்கர்தாஸ் கார் கடத்தியது குறித்து நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்விகீதா வழக்குப்பதிவு செய்து காரை கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×