search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன அலுவலர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    தனியார் நிறுவன அலுவலர் தூக்குபோட்டு தற்கொலை

    • சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த பூலக்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31).

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவன த்தில் இளநிலை அலுவல ராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரண்யா (23) என்ற மனைவும், 2 மகன்க ளும் உள்ளனர்.

    இந்நிலையில் சதீஷ்குமார் பவானியில் உள்ள அவரது பெற்றோரையும் கவனித்து வந்தார். மேலும் நண்பர்களு க்கு அடிக்கடி பண உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாகவும் மேலும் சதீஷ்குமாருக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி இருந்து வந்தது.

    இதையடுத்து பணம் இல்லாததால் சதீஷ்குமார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். மேலும் கடன் அதிகமான தால் சதீஷ்குமார் மன வரு த்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் இருக்கும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து மருத்துவமனைக்கு அழை த்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து மனைவி சரண்யா மகனை அழைத்துக் மருத்துவ மனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்புறமாக மூடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதையடுத்து சரண்யா உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சதீஸ் குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×