என் மலர்
நீங்கள் தேடியது "principle"
கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #StudentsKidnapped
யவுன்ட்:
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர்.
அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், டிரைவர் ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது. #StudentsKidnapped
கடந்த 19 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்பட்டதை அடுத்து மக்களை ஏமாற்றுவதே மோடியின் பொருளாதார கொள்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
புதுடெல்லி:
கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 19 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கர்நாடகா தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை, மக்கள் வாக்களித்து முடித்தவுடன், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மோடியின் பொருளாதார கொள்கையே முடிந்தவரை மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதாகும்’ என பதிவிட்டுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi






