search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pradhosa worship"

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் குரு வார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், அபிஷேக பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார். பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் தொண்டி சிதம்பரேஸ்வர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
    • சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் உள்ள சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    மாலையில் சுவாமி , அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமி அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார். மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    ×