search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை   குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்த காட்சி


    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
    • சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் உள்ள சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    மாலையில் சுவாமி , அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமி அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார். மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×