search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pradeepa"

    நீட் தேர்வுக்காக தமிழகம் காவு கொடுத்தது அனிதா, பிரதீபா என்ற விலை மதிக்க முடியாத உயிர்களை மட்டுமல்ல, அதற்காக பள்ளி வளர்ச்சி குழுமம் ஒதுக்கிய மக்கள் பணம் ரூ.19 கோடியையும்தான். #NEET #NeetKillsPradeeba
    சொல்லும் போது நல்லாத்தான் சொல்கிறார்கள். ஆனால் செய்வதில் தான் கோட்டை விடுகிறார்கள்.

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை ‘நீட்’ பயமுறுத்துகிறது. அதை எதிர்கொள்ளும் ஆற்றலையும், திறமையையும் நமது கல்வி முறை வழங்கவில்லை என்பது உண்மை.

    எப்படியாவது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு பெற்று விடுவோம் என்று அரசியல் கட்சிகள் கூச்சல் போட்டதை நம்பி கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் கோட்டை விட்டார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை. நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்கள் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அகில இந்திய அளவில் போட்டி போடும் அளவுக்கு இந்த பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்கள் தயார் படுத்தப்படுவார்கள் என்று கடந்த ஆண்டே அரசு அறிவித்தது. அந்த வார்த்தையே தேன் தடவியது போல் இனித்தது. ஆனால் நடந்திருப்பது மிகவும் கசப்பான நிகழ்வுகள் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த ஆண்டும் நீட் தேர்வுக்காக பிரதீபா என்ற மாணவி காவு கொடுக்கப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் பிரதீபா மீண்டும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். இதற்காக பயிற்சியும் பெற்று இருக்கிறார். அப்படி இருந்தும் 39 மதிப்பெண்தான் பெற்று இருக்கிறார்.

    இவ்வளவு குறைவான மதிப்பெண் பெறும் அளவுக்கு பிரதீபா மக்கு மாணவி அல்ல. 10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும், பிளஸ்-2வில் 1125 மதிப்பெண்ணும் பெற்றவர்.


    நீட் தேர்வை சந்திக்கும் அளவுக்கு பாடத் திட்டம் சரி இல்லை என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் பயிற்சி அளித்ததும் சரியில்லாமல் போனதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 35-வது இடத்தை பெற்று கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று தலைகுனிந்து நிற்கிறது. இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

    நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும், அந்த வகையில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த பயிற்சி மையங்கள் தெடங்கப்பட்டதாகவும் அதில் பயிற்சி பெற்றவர்கள் 1337 பேர் வெற்றி பெற்று இருப்பதாகவும் கல்வித்துறையின் ஏட்டுக் கணக்கு சொல்கிறது. ஆனால் ஒரு மாணவர் கூட அரசு ஒதுக்கீட்டு இடத்தை பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லையே!

    இதுபற்றி விசாரித்தபோதுதான் முறையாக பயிற்சி மையங்கள் செயல்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

    இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மொத்தம் 412 பயிற்சி மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் வாரியாக பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த அறைகளை கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டும். 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். திறமையான அந்த முதுகலை ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். வி-சாட் தொழில்நுட்பத்தில் இணைய வழி கற்றலுக்கு ஏற்ற வகையில் அனைத்து பயிற்சி மையங்களிலும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

    பாட வாரியாக கால அட்டவணை தயாரித்து பாடம் நடத்த வேண்டும். மாதிரி பயிற்சி கையேடு வழங்க வேண்டும். மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தில் இருந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போது மாணவர்கள் கேள்விகள் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதற்காக படக்காட்சி ஒளிப்பதிவு கருவி, கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள், பயிற்றுனர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு பள்ளி வளர்ச்சி குழுமம் ரூ.19 கோடியை ஒதுக்கியது.

    ஆனால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக குறைவாகவே பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகள்தான் மாணவர்களை சாதிக்க முடியாமல் ஆக்கி விட்டது என்றார்.

    மொத்தத்தில் நீட் தேர்வுக்காக தமிழகம் காவு கொடுத்தது அனிதா, பிரதீபா என்ற விலை மதிக்க முடியாத உயிர்களை மட்டுமல்ல. மக்கள் பணம் ரூ.19 கோடியையும்தான். #NEET #NeetKillsPradeeba #NEETExam
    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினார்கள். அவ்வாறு தமிழில் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காததால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. கடந்த ஆண்டு பெற்ற 155 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



    கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும்  நீட் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசியபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மாணவர்கள் யாரும் எடுக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    ×