search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power production"

    சாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 96 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வலதுபுற கால்வாயில் இருந்து 200 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும் கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

    அன்று முதல் இங்குள்ள புனல் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தண்டராம்பட்டு மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போதும் மற்றும் பாசனத்திற்காக நீர் திறக்கும்போதும் புனல் மின்நிலையம் இயங்கும்.

    தமிழக அரசு 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஜனவரி 23-ந் தேதி முதல் வரும் மார்ச் 4-ந் தேதி வரை பாசன நீர் திறக்கப்படும். அந்த 40 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தியும் இங்கு நடைபெறும். அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.

    பாசனத்துக்காக நீர் திறப்பதற்கு முன் அதாவது ஜனவரி 23-ந் தேதி அணையின் நீர் மட்டம் 96.20 அடி (கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடி) ஆகும். நேற்று 10 அடி நீர்மட்டம் குறைந்தது. 86.05 அடி (கொள்ளளவு 2,047 மில்லியன் கன அடி) ஆக இருந்தது. இதற்கிடையில் திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்காக 10 நாட்கள் அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சத்தனூர் அணை முழுவதும் நிரம்பியிருந்ததால் 95 நாட்கள் பாசன நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாசன நீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை தாலுகாவில் 20 ஏரிகளிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் 10 ஏரிகளிலும் 60 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது.

    கூடங்குளத்தில் 2-வது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    2-வது அணு உலையில் மட்டும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி வால்வு கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் கூடங்குளம் அணு மின்சாரம் தமிழகத்துக்கு முற்றிலும் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையை விரைவில் சீரமைத்து மின் உற்பத்தி தொடங்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.37 மணிக்கு 2-வது அணு உலை மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று மாலை இது 450 மெகாவாட்டாக உயர்த்தப்படும். அதன் பிறகு படிப்படியாக 2 நாளில் மீண்டும் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மின் தொகுப்புக்கு அனுப்பப்படும். இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது.  #KudankulamNuclearPowerPlant
    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வல்லூர் அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. #VallurThermalPowerPlant
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் தமிழகத்துக்கும், 30 சதவீதம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    அனல்மின் சாம்பல் கழிவு எண்ணூர் சதுப்புநில பகுதிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்பல் கழிவு கொட்டப்படும் இடத்தை நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வையிட்டு சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் சதுப்பு நில பகுதியில் அனல்மின் நிலைய கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி மத்திய அரசின் விதிமுறையை மீறி சதுப்பு நில பகுதியில் சாம்பலை கொட்ட அனல்மின்நிலையம் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வல்லூர் அனல்மின்நிலையம் செயல்படுவதற்கான மத்திய அரசின் அனுமதியும் கடந்த ஆண்டு மார்ச் 18-ந் தேதியுடன் முடிவடைந்து இருந்தது. இதனை புதுப்பிக்க கோரும் மனுவும் நிலுவையில் உள்ளது.

    இதனால் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சதுப்பு நில பகுதியில் சாம்பல் கழிவை கொட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். விரைவில் அனல்மின் நிலையம் செயல்படும்’’ என்றார். #VallurThermalPowerPlant

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் இன்று காலை நிலவரப்படி மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் சாரம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் நிறுத்தப் பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பணி முடிவடைந்து 2-வது அணு உலையில் மீண்டும் நேற்று மின்உற்பத்தி தொடங்கியது.

    முதலில் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. அதனை படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant

    ×