என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pornography on social media"

    • பா.ம.க. பிரமுகர் கைது
    • போலீசில் புகார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபு தேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்யும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் முன்பும், சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் அங்கு ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக ஒரு வாலிபர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. அந்த வாலிபர் தனது காரின் கண்ணாடியில் இருந்த பனியை துடைப்பதற்காக 3 மாத குழந்தையை கருவி போல பயன்படுத்தி பனியை அகற்றும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×