search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal festivel"

    • 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது.
    • மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு 9மணிக்கு கங்கையில் இருந்து அம்மன் அழைத்து வருவல் (கும்பம் எடுத்தல்) நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 4-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 3மணிக்கு அலங்கார பூஜை , 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் (கும்பம் விடுதல்) நடக்கிறது.

    நாளை மறுநாள் 5-ந்தேதி மதியம் 12மணிக்கு மஞ்சள் நீர் பூஜை நடக்கிறது. 6-ந்தேதி மாலை 7மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை நடக்கிறது. 

    பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். #Tasmac
    சென்னை:

    பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதன்காரணமாக பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகையின் போது கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர், மங்களமேடு, பாடாலூர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக பெண்கள் அவர்களது வீட்டின் முன்பு பெரிய அளவிலான வண்ண கோலமிட்டிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

    அதனை தொடர்ந்து உழவுக்கு வித்திட்ட மாடுகளை அலங்கரிக்கும் விதமாக மாட்டு பொங்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் காலை நேரத்திலும், பெரம்பலூர் நகர் பகுதிகளில் மாலை நேரத்திலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளான பசுமாடு, கன்றுக்குட்டிகள், காளைகள் ஆகியவற்றை குளிப்பாட்டி மூக்கணாங் கயிறு, கழுத்து மணி, அந்த மாடுகளின் கொம்புகளில் கயிறு ஆகியவற்றை கட்டி அலங்கரித்தனர். பின்னர் அவற்றிற்கு பூஜை செய்து விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்போர் வழிபட்டனர்.

    மேலும் பொங்கல், மாட்டுபொங்கலையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதிகளில் கரும்பு கட்டுகளின் விற்பனை நடந்தது. பொங்கல் அன்று மட்டும்தான் அதன் விற்பனை படுஜோராக இருந்தது. அப்போது கரும்பு ஒரு கட்டு ரூ.700 வரை விற்கப்பட்டது. கரும்புகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால், நேற்று கரும்பு கட்டின் விலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு நேற்று முன்தினம் ரூ.700-ஆக இருந்த ஒரு கரும்பு கட்டு நேற்று ரூ.200-க்கு விற்பனையானது.

    ஆனால் அதனை மாட்டு பொங்கலிடுபவர் மட்டும் வாங்கினர். ஆனால் பொதுமக்கள் வாங்க ஆர்வப்படவில்லை. இதனால் வியாபாரிகள் கரும்புகளை கூவி, கூவி விற்பனை செய்ய ஆரம்பித்தனர். முதலில் ஒரு கரும்பின் கட்டின் விலை ரூ.200 என்று கூறியும், பொதுமக்கள் வாங்க முன்வராததால், ரூ.150-க்கும் விற்றனர். ஆனால் மஞ்சள் கொத்து, மண்பானைகள், வாழைத்தார், பூக்களும் பொங்கலன்று விற்பனையான விலையை விட மாட்டு பொங்கலன்று சற்று குறைந்து காணப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் உள்ள நளினியம்மன் சமேத காகன்னை ஈஸ்வரர் கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இதேபோல் வடக்கு மாதவி சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சுவாமி சித்தர் அதிர்ஷ்டானத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தலையாட்டி சித்தர் ஆசிரமத்திலும் பொங்கலிடப்பட்டது. பெரம்பலூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது.

    இதேபோல் மாட்டு பொங்கலன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து காய், கனி, மலர்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்கார செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதலே பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தனியார் அறக்கட்டளை மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். 
    மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் ஸ்ரீவித்யா கல்விக்குழும நிர்வாகம் மற்றும் அனைத்து குழும கல்லூரி, பள்ளிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் கலை பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவித்யா மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி, கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதனையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்விக்குழும நிறுவன தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ், துணைத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.



    சாத்தூர் மேட்டமலை ஸ்ரீவத்சா கல்வியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா, கல்லூரி தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    சிவகாசி அனிதா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவுக்கு பள்ளி தலைவர் ஆறுமுகச்சாமி வடிவேல், பள்ளி தாளாளர் வசந்த் விகாஷ் ஆறுமுகச்சாமி மற்றும் சுஜிதா விகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சாத்தூர் மேட்டமலை பி.எஸ்.என்.எல். கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி உறியடித்தல், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைகள் முன்னேற்ற பாதையில் செல்கின்றனவா?, அழிவு பாதையில் செல்கின்றனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

    தாயில்பட்டி அருகே செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா, தாளாளர் பார்வதி சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி இயக்குனர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கல்வி குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் மற்றும் சசிரேகா, பள்ளி செயலாளர் சரவணன், சங்கீதா சரவணன், ஹேமாபார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பட்டிமன்றம் நடந்தது.

    ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தாளாளர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    ×