search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PlusTwo"

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    ×