search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus-1 student murder"

    • நண்பர்கள் 4 பேர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கஞ்சா மற்றும் குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சத்தி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவரை தாக்கி கொலை செய்தது யார் என்பது குற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாணவர் இறந்து கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாக காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவரை அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சிகளை கைபற்றி போலீசார் மாணவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இறந்த எங்களுடைய நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் நாங்கள் எங்களது நண்பருக்கு அறிவுரை கூறினோம். இதனை ஏற்க மறுத்த அவர் எங்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினோம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் பயந்த நாங்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார். தொடர்ந்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள். 

    ஜெயங்கொண்டம் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதிழயகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லலிதா.

    இந்த தம்பதிக்கு முருகன், மணிகண்டன் (வயது 16) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே லலிதா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இதையடுத்து மதியழகன் மனைவி இறந்த 2 ஆண்டுகளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஊரை காலிசெய்து விட்டு சென்றார். இதனால் அவரது மகன்களான முருகன் அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிலும், மணிகண்டன் பொற்பதிந்தநல்லூரில் உள்ள தனது பாட்டி பாப்பாத்தி வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.

    இதற்கிடையே பாப்பாத்தி தனது பேரன் மணிகண்டனை படிக்க வைக்கும் ஆவலுடன் அவரை அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். அங்கு அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது பிளஸ்-1 பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக இருந்தததால் பொற்பதிந்தநல்லூருக்கு வந்த மணிகண்டன், இன்று நடைபெறும் கடைசி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    நேற்று இரவு பாட்டி வீட்டிற்கு அருகிலுள்ள தனது பூர்வீக வீட்டில் இரவு நீண்ட நேரம் வரை படித்து விட்டு தூங்க சென்றார். இந்தநிலையில் இன்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த பாட்டி பாப்பாத்தி அங்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது, மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் யாரோ மர்ம நபர்கள் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

    அலறித்துடித்த பாப்பாத்தியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தா.பழுர் போலீசார் கொலையுண்ட மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டனை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. அவருக்கு பிரச்சினைகள் ஏதாவது இருந்ததா, யாராவையாது காதலித்தாரா அல்லது சொத்து தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இன்று கடைசி தேர்வு எழுத இருந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×