search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 boys arrested"

    • அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பணத்தகராறில் விவசாயியை கொன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெ க்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்த நபர் அய்யலூர் அருகே மாமரத்து ப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது41) என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் தபால்புள்ளி, கோம்பையை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் அவரை கொன்றது தெரிய வந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:-

    முருகேசன் விவசாயம் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதனால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் என எண்ணினோம். இதனால் மது குடிக்க வனப்பகுதிக்கு அழைத்து சென்றோம். அங்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரிடம் பணம் கேட்டோம். ஆனால் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. முருகேசனுக்கு கண்மணி என்ற மனைவியும், ரங்கநாதன், சிவா என 2 மகன்களும் உள்ளனர். கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீ சார் 8 மணி நேர த்தில் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நண்பர்கள் 4 பேர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கஞ்சா மற்றும் குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சத்தி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவரை தாக்கி கொலை செய்தது யார் என்பது குற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாணவர் இறந்து கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாக காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவரை அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சிகளை கைபற்றி போலீசார் மாணவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இறந்த எங்களுடைய நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் நாங்கள் எங்களது நண்பருக்கு அறிவுரை கூறினோம். இதனை ஏற்க மறுத்த அவர் எங்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினோம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் பயந்த நாங்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார். தொடர்ந்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள். 

    ×