search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic barrier"

    • கடை மற்றும் வீடுகளில் பதுக்கினர்.
    • 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடை மற்றும் வீட்டிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கடை மற்றும் வீடுகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தனர்.

    இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடை மற்றும் வீட்டின் உரிமையாளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    அமைச்சர் அனுமதி அளித்ததால் பிளாஸ்டிக் தடைகாலம் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja #plasticban

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுகுறு தொழில்முனைவோர், வணிகர்கள் அனைவரும் துன்புறுத்தலுக்கும், அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதி முதலே பிளாஸ்டிக் தடை காரணமாக, அதிகாரிகளின் தொழில்வணிக விரோத நடவடிக்கைக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு, தமிழகத்தின் லட்சோப லட்ச வணிகர்களுக்கு ஆதரவாக கண்டனக்குரல் எழுப்பி வருகின்றது.

    நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், தமிழ்நாடு அனைத்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

    இப்போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் பிரைமரி பேக்கிங் செய்யக்கூடிய எல்.டி., பி.டி., எச்.எம்., போன்ற பேக்கிங் கவர்களை வைத்திருப்பவர்கள், நாளை முதல் கடைகளை திறந்து 15 நாட்களுக்கு வணிகம் செய்யலாம் என்றும், லைசென்ஸ் பெற்றுள்ள அனைத்து கவர் வகைகளையும் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வர் பிளாஸ்டிக் சிறுகுறு தொழில்முனைவோர் வணிகர்களையும் அழைத்துச் பேசுவதாக உறுதியளித்துள்ளார். இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #vikramaraja #plasticban

    ஈரோடு நகரில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கிறார்கள். #Plasticban
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் கடைகளில் கொடுக்கப்படுகிறது. பைகளின் தரத்திற்கு ஏற்ப 2 ரூபாய், 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    கடை வியாபாரிகள் பைகளை கொடுக்கும் போது ‘‘அடுத்த தடவை வரும் போது தவறாமல் இந்த துணி பையை கொண்டு வாருங்கள்’’ என அறிவுரையும் கூறி வருகிறார்கள்.

    இதே போல் இறைச்சி கடை, மீன் கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு வாழை இலை, தேக்கு மர இலை, தைல இலைகளில் கொடுத்து வருகிறார்கள்.

    டாஸ்மாக் மதுக்கடைகளில் சரக்கு அடிக்க பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தி வருவார்கள். அதை குடிமகன்கள் பயன்படுத்தி விட்டு தூர எறிந்து விட்டு போவார்கள்.

    ஈரோடு நகரில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கிறார்கள். பிராந்தி, ரம் மற்றும் பீர் ஊற்றி குடிக்க இந்த கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த டம்ளர்கள் சொந்தமாக குடிமகன்களுக்கு கொடுப்பது இல்லை.

    ஒரு டம்ளருக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதில் ஊற்றி சரக்கு அடித்து விட்டு கண்ணாடி டம்ளர்களை அங்கேயே கொடுத்து விட்டு வர வேண்டும்.

    நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சென்றால் 50 ரூபாய் கண்ணாடி டம்ளருக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குடிமகன்கள் குழம்பி வருகிறார்கள். #Plasticban
    ×