என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "planning committee meeting"
- ஆறு முதல் 18 வயது பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடத்தை மாற்ற வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆறு முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகள் இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 100 சதவீத பள்ளியில் சேர்க்க திட்டமிடுவதற்கான குழு கூட்டம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமையேற்றார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி வரவேற்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி,கோமதி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மங்களதாசன், இளஞ்செழியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் விஜயா,காவல் ஆய்வாளர் அலாவுதீன், ஒருங்கிணைப்பாளர் ஐசக் ஞானராஜ், சிறப்பு ஆசிரியர்கள் ராஜலட்சுமி,பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி பேசுகையில், பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடம் ஒன்றியத்தை மாற்றுவதற்கு குழு உறுப்பினர்களுக்கு முழுமையான பங்கு உண்டு.
நமது ஒன்றியத்தில் சுமார் 196 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
இதில் 136 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம்.
செங்கல் சூளைகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற வற்றில் பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள் இருந்தால், உடனடியாக 9788858785, 9965098829 இந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
- கூட்டத்தில் புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பங்கேற்பு
- மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை,
கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி (சூலூர்), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் புதிதாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கோபால்சாமி, கந்தசாமி, சக்திவேல், ராஜன், அப்துல் காதர், உமாமகஷே்வரி, செல்வராஜ், சிவா, கபிலன், ஜம்ருத்பேகம் முகமதுயூ னூஸ், கனகராஜ், ஸ்ரீதரன், கிருஷ்ணகுமாரி, மோகனப்ரியா, மனோகரன், பழனிசாமி என்ற சிரவை சிவா, ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏதுவாக மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்