search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி செல்லா 136 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்
    X

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடை நின்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடந்தது.

    பள்ளி செல்லா 136 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்

    • ஆறு முதல் 18 வயது பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடத்தை மாற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆறு முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகள் இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 100 சதவீத பள்ளியில் சேர்க்க திட்டமிடுவதற்கான குழு கூட்டம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமையேற்றார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி வரவேற்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி,கோமதி முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் மங்களதாசன், இளஞ்செழியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் விஜயா,காவல் ஆய்வாளர் அலாவுதீன், ஒருங்கிணைப்பாளர் ஐசக் ஞானராஜ், சிறப்பு ஆசிரியர்கள் ராஜலட்சுமி,பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி பேசுகையில், பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடம் ஒன்றியத்தை மாற்றுவதற்கு குழு உறுப்பினர்களுக்கு முழுமையான பங்கு உண்டு.

    நமது ஒன்றியத்தில் சுமார் 196 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

    இதில் 136 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம்.

    செங்கல் சூளைகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற வற்றில் பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள் இருந்தால், உடனடியாக 9788858785, 9965098829 இந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×