search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Performing Arts"

    • கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடந்த 74-வது குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    தொடக்க நிகழ்ச்சியில் 7-ம் வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-ம் வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா கிராஅத் ஒதினர். 5-ம் வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-ம் வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-ம் வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை சோதிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமுக்கு முதல்வர், தலைமை ஆசிரி யர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    11-ம் வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார். தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
    • விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா மற்றும் சாரணர் இயக்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு தாமரை குழுமத்தின் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினராக கும்பகோணம் கல்வி மாவட்ட சாரண இயக்க செயலாளர் சுவாமிநாதன் தமிழ் ஆசிரியர் நகர மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி மாணவிகள் அணியின் சுற்றுச்சூழல் துணை செயலாளர் மோகனப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பள்ளி முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    சிறப்பு விருந்தினர் சாரணர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி மாணவர்கள் அணியின் சுற்றுச்சூழல் செயலாளர் செல்வன் லோகித் நன்றி கூறினார்.

    ×