search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peravallur"

    பெரவள்ளூரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    பெரவள்ளூர் 5-வது சர்க்கிள் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். தனியார் நிறுவன ஊழியர்.

    இவருடைய மனைவி திவ்யா (24). வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார்.

    இதை பார்த்த திவ்யா கத்த தொடங்கினார். உடனே முகமூடி அணிந்து வந்தவர், கத்தினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி திவ்யாவின் வாயை பொத்தி ஒரு நாற்காலியில் கட்டிபோட்டார்.

    கண் இமைக்கும் நேரத்தில் திவ்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு முகமூடி ஆசாமி வெளியே ஓடினான். திவ்யாவின் குரல் கேட்டு மாடியில் இருந்த தாய் கீழே ஓடிவந்தார்.

    இதற்குள் திருடன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

    பெரவள்ளூரில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. #DMK
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு, கிழக்குப் பகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டனப் பொதுக் கூட்டம் நாளை (வெள்ளி) மாலை 6 மணியளவில் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் தலைமை தாங்குகிறார்.

    கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப். வ.முரளிதரன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. புதுக்கோட்டை விஜயா, நடிகர் வாசு விக்ரம், மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிசந்திரன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    கூட்டத்தில் தேவஜவகர், சி.மகேஷ்குமார், கே. சந்துரு, அ.கன்னியப்பன், மு.க.டில்லி, எம்.நாகராஜ், வி.வெங்கடேசன், கொளத்தூர் கிழக்கு பகுதி பன்னீர் செல்வம் வட்ட செயலாளர்கள் அதிபதி, பாபு மற்றும் மாவட்ட பகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #DMK


    ×