என் மலர்
நீங்கள் தேடியது "patient suicide"
- நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
- அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் தவிட்டுமணி (வயது 67). இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புற்றுநோய்க்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் வேதனையால் அவர் அவதிப்பட்டார். எனவே உயிர்வாழ்வதைவிட தற்கொலை செய்வது மேல் என தவிட்டுமணி தீர்மானித்தார். அதன்படி இன்று காலை வார்டு வளாகத்தில் உள்ள மாடிப்படிக்கு சென்றார். பின்பு அங்குள்ள கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தவிட்டுமணி தற்கொலை செய்தார்.
இன்று காலை நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார்.
- தற்கொலை குறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு ஜெயலட்சுமி எழுந்து பார்த்தபோது, செல்வம் தனக்குதானே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி, மருந்து ஏற்றும் பிளாஸ்டிக் டியூப்பால் கழுத்தை இறுக்கி கட்டிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி நர்சை அழைத்து முதலுதவி செய்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனை:
திருபுவனை அருகே தமிழக பகுதியான சேழாங்கனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சரசு (வயது62). இவர்களுக்கு வரதன் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமலிங்கம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் சரசுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை வரதன் உடனிருந்து கவனித்து வந்தார்.
நேற்று சரசு ஆஸ்பத்திரி கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வார்டுக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த வரதன் அங்கிருந்த நர்சிடம் மூலம் கழிவறைக்கு சென்று பார்க்குமாறு கூறினார். இதையடுத்து நர்சு கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சரசு தான் அணிந்திருந்த சேலையால் கதவின் தாழ்ப்பாளில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து வரதன் இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன்ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (29). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் சாணிப்பவுடரை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் திடீரென ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார்.
இதில் அவர் எலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் அவரை மீட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதற்காக ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. அதற்குள் மணிகண்டன் இறந்து விட்டார்.
இது குறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். மணிகண்டன் எதற்காக ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாடிக்கு செல்லும் வழி கிரீல் கதவால் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. மணிகண்டன் மாடிக்கு எப்படி சென்றார் என்பது தெரிய வில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டன் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.






