search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் அரசு ஆஸ்பத்திரி வார்டில் நோயாளி தற்கொலை
    X

    சிதம்பரத்தில் அரசு ஆஸ்பத்திரி வார்டில் நோயாளி தற்கொலை

    • நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் தவிட்டுமணி (வயது 67). இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புற்றுநோய்க்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் வேதனையால் அவர் அவதிப்பட்டார். எனவே உயிர்வாழ்வதைவிட தற்கொலை செய்வது மேல் என தவிட்டுமணி தீர்மானித்தார். அதன்படி இன்று காலை வார்டு வளாகத்தில் உள்ள மாடிப்படிக்கு சென்றார். பின்பு அங்குள்ள கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தவிட்டுமணி தற்கொலை செய்தார்.

    இன்று காலை நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×