search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padi murder"

    சென்னை பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை என்றும் பாராமல் மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்பத்தூர்:

    சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52).

    இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மகன்கள் குமரேசன், சூரிய பிரகாஷ் ஆகியோரும் தந்தையுடன் சேர்ந்து பழக்கடையை கவனித்து வந்தனர்.

    நேற்று இரவு 11.30 மணி அளவில் பழக்கடையை மூடி விட்டு தமிழ்செல்வன், 2 மகன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் வைத்து 2-வது மகனான சூரியபிரகாசுக்கும், தமிழ் செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

    அப்போது வீட்டில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து சூரிய பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சூரியபிரகாசை கைது செய்தார்.
    ×