என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடியில் தந்தையை குத்திக்கொன்ற மகன்
Byமாலை மலர்23 April 2019 5:09 AM GMT (Updated: 23 April 2019 5:09 AM GMT)
சென்னை பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை என்றும் பாராமல் மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர்:
சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52).
இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மகன்கள் குமரேசன், சூரிய பிரகாஷ் ஆகியோரும் தந்தையுடன் சேர்ந்து பழக்கடையை கவனித்து வந்தனர்.
நேற்று இரவு 11.30 மணி அளவில் பழக்கடையை மூடி விட்டு தமிழ்செல்வன், 2 மகன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் வைத்து 2-வது மகனான சூரியபிரகாசுக்கும், தமிழ் செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
அப்போது வீட்டில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து சூரிய பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சூரியபிரகாசை கைது செய்தார்.
சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52).
இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மகன்கள் குமரேசன், சூரிய பிரகாஷ் ஆகியோரும் தந்தையுடன் சேர்ந்து பழக்கடையை கவனித்து வந்தனர்.
நேற்று இரவு 11.30 மணி அளவில் பழக்கடையை மூடி விட்டு தமிழ்செல்வன், 2 மகன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் வைத்து 2-வது மகனான சூரியபிரகாசுக்கும், தமிழ் செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
அப்போது வீட்டில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து சூரிய பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சூரியபிரகாசை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X