search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ordinance issued"

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்பட்டு அரசாணை வெளியானது.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் மற்ற நகராட்சிகளை காட்டிலும் சொத்து வரி அதிகளவில் உள்ளது. ஆகவே மற்ற நகராட்சிகளை போலவே ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சொத்து வரியை குறைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அனுப்பட்டது.

    சொத்து வரியை குறைக்க ராஜபாளையம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் ஆகியோரை வலியுறுத்தியதன் பலனாக தற்போது சொத்து வரி குறைக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்த நல்ல தகவலை ராஜபாளையம் நகர பொதுமக்களுக்கு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசாணை வெளியாக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், தொழில்த்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து ராஜபாளையம் நகராட்சியில் தீர்மானம் வைத்து கொடுத்த நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்களுக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×