search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty 35 new buses"

    • 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருந்து குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் மொத்தம் 11,151 பேர் குரூப்-4 தேர்வில் பங்கேற்க உள்ளனர். 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில் மொத்தம் 21 மொபைல் யூனிட் உட்பட 40 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    தேர்வுக்கு செல்வதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியில் இருந்தும், பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணியில் இருந்தும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து கடந்த 14-ந்தேதி குன்னூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஊட்டி அருகே உள்ள மந்தாடா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஊட்டி வந்தார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 6 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் 2 பேருக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும். மேலும் இங்குள்ள 4 டெப்போக்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உடனடியாக வழங்கப்படும்.

    ஊட்டி நகரில் சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, அர்ச்சுணன் எம்.பி., குன்னூர் எம்.எல்.ஏ., சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #MRVijayabaskar
    ×