search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
    X

    ஊட்டியில் புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து கடந்த 14-ந்தேதி குன்னூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஊட்டி அருகே உள்ள மந்தாடா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஊட்டி வந்தார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 6 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் 2 பேருக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும். மேலும் இங்குள்ள 4 டெப்போக்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உடனடியாக வழங்கப்படும்.

    ஊட்டி நகரில் சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, அர்ச்சுணன் எம்.பி., குன்னூர் எம்.எல்.ஏ., சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #MRVijayabaskar
    Next Story
    ×