search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman murdered"

    ஆம்பூர் அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் பழைய காலனியை சேர்ந்த ராமர் மனைவி மணியம்மாள் (வயது 60). ஆதரவற்ற நிலையில் இருந்த இவர் அங்குள்ள கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் தங்கி வந்தார்.

    நேற்று இரவு கூட்டுறவு வளாகத்தில் ரேசன் கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.

    இன்று காலை ரத்த வெள்ளத்தில் மணியம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

    ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பாலசுப் பிரமணி, கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.அது மூதாட்டி கொலையான இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசார் மணியம்மாள் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன இதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த தும்பலஅள்ளி நடுகொட்டாயில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது75).

    தனியாக வசித்து வந்த இவர் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உடனே கதவை தட்டி பார்த்த போது கதவு திறக்கவில்லை. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது சின்னம் மாள் எந்தவித அசைவும் இல்லாமலும் இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சின்னம்மாள் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவர் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

    இந்த சம்பம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நோட்டமிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை தராததால் மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்.

    ×