search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offering Ganesha Temple"

    • தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.
    • அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகையொட்டி தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. முன்னதாக காலையில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் தேவஸ்தான ஆஸ்தான ஜோதிடர் சிவக்குமார் சர்மா எழுதிய காணிபாக்கம் தேவஸ்தானம் பஞ்சாங்கம் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. காணிப்பாக்கம் கிராம அர்ச்சகர் மோகன் ராமலிங்கம், பஞ்சாங்கம் படித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, வாசு, கோவில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்கள சமேத பள்ளிகொன்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திலும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பதியை சேர்ந்த சிலக்கப்பாட்டி குமார ஆச்சாரியர்களால் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கே.ராமச்சந்திரா ரெட்டி மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ×