search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nursing Student Molested"

    • சிவகுமார், தனது சகோதரியின் குழந்தைக்கு பிறந்தநாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
    • குளச்சல் மகளிர் போலீசில் நர்சிங் மாணவி புகார் செய்தார்.

    குளச்சல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், நாகர்கோவிலில் ஒரு விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார்.

    நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(25). குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் நர்சிங் மாணவியும் உறவினர்கள் ஆவர்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி சிவகுமார், தனது சகோதரியின் குழந்தைக்கு பிறந்தநாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிவகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக நர்சிங் மாணவியை சமாதானம் செய்துள்ளார். ஆனால் அவர்களது திருமணத்துக்கு சிவகுமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் நர்சிங் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவகுமார், அவரது தந்தை பால்ராஜ்(55) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசார், சீவலப்பேரி சென்று சிவகுமார், அவரது தந்தை பால்ராஜ் ஆகியோரை கைது செய்து குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சிவகுமார், தனது சகோதரி குழந்தைக்கு பிறந்த நாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்தார்.
    • மண்டைக்காடு வந்த மாணவிக்கு, சிவகுமார் குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தாராம்.

    குளச்சல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் குலசேகரன்நல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் தங்கி நர்சிங் படித்து வருகிறார்.

    இளம்பெண்ணின் உறவுக்கார வாலிபர் சிவகுமார் (வயது 25). நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டியை சேர்ந்த சிவகுமாரின் சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகுமார் மண்டைக்காட்டில் சகோதரி வீட்டில் தங்கி, அப்பகுதியில் படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமாரும், நர்சிங் மாணவியும் உறவினர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி சிவகுமார், தனது சகோதரி குழந்தைக்கு பிறந்த நாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்தார்.

    மண்டைக்காடு வந்த மாணவிக்கு, சிவகுமார் குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தாராம். குளிர்ப்பானம் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்தார். அப்போது சிவகுமார் , மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக சமாதானம் கூறினாராம். இதற்கிடையே சிவகுமாரின் வீட்டினர், நர்சிங் மாணவியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகுமார் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×