search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "no use"

    • தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை,
    • மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜ் பங்கேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரத்தினசாமி, சுரேஷ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், சிறப்பு அழைப்பாளர்களாக மள்ளர்சேனை ராஜ தேவேந்திரன், அகில பாரதிய சந்த்சமிதி ஒருங்கிணைப்பாளர் வீரபூமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:-

    திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் அதிகளவில் மல்லிகை மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்காக இந்த பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நிலையூர் கண்மாயை தூர்வார வேண்டும்.

    திருமங்கலம், திருப்பரங்கு ன்றம் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும். நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால் அதனை அகற்ற வேண்டும். எம்.கல்லுப்பட்டியில் இருந்து மயிலாடுதுறை வழியாக கடமலைக்குண்டு செல்லும் மலைப்பாதையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும். சாப்டூரில் இருந்து சந்தையூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    டேரா பாறை என்ற அணை 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.அதன் பின்பு 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.அதன் பின்பு இன்றுவரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான ஆய்வு பணியை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற கோரி விரைவில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு. உதாரணத்திற்கு ரூ.350 கோடி வாடகைக்கு விடுவதற்காக எந்திரங்களை வேளாண்மை பொறியியல் துறை அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வாங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

    அப்படி இருக்கும்போது மீண்டும் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து எந்திரங்களை வாங்கி வீணடிப்பது தவறு. தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #jayakumar #cauveryissue
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கமலஹாசன் கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என பதிலளித்துள்ளார். #jayakumar #cauveryissue
    ×