search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Next month"

    • அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்
    • தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    ஈரோடு:

    தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு ஒன்றிய அரசின் விலை ஆதரவு திட்டத்தில் ஈரோடு விற்பனை குழுவின் கீழ் செயல்படும் அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்தூர்,

    கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தியமங்கலம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், வெப்பிலி துணை விற்பனை கூடத்திலும் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடக்க உள்ளது.

    அரசு நிர்ணயிக்கும் தரத்தில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60-க்கும், ஒரு கிலோ பந்து கொப்பரை, ரூ.117.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முகப்பு, சிட்டா, அடங்கல் நகலுடன், ஈரோடு விற்பனை குழு தலைமை அலுவலகம் – 0424-2339102,

    அவல்பூந்துறை – 0424-2331279, பவானி – 98946 26295, பூதப்பாடி – 0456-227070, எழுமாத்தூர் – 79040 62073, கோபி – 04285-222278, கவுந்தப்பாடி – 04256-298856,

    கொடுமுடி – 04204-224297, மைலம்பாடி – 99425 06990, சத்தியமங்கலம் – 04295-233346, சிவகிரி -04204- 240380, வெப்பிலி துணை விற்பனை கூடம் 04294-220512 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகரில் எஸ்.என். ஹை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.

     நெல்லை:

    நெல்லை மாநகரில் எஸ்.என். ஹை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.இதற்கு இடையே கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முடிவு செய்தது.

    இதையடுத்து அந்த இடத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் கே. ஆர் .ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொருட்காட்சிக்கான கால்கோள் நாட்டினர்.

    இதில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுக செல்வி மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவின் போது மேயர் சரவணன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அடுத்த மாதம் பொருட்காட்சியை சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அதன் அடிப்படையில் அனைத்து துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அரசின் திட்டங்களினால் கிடைக்கும் பலன்களை மக்கள் அறியும் வகையில் 45 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது.

    அரசு துறை சார்பில் 32 அரங்குகள் அமைக்கப்படும். இது தவிர தனியார் சார்பிலும் ஏராளமான அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ×