அடுத்த மாதம் முதல் கொப்பரை கொள்முதல்

அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அடுத்த மாதம் முதல் கொப்பரை கொள்முதல்
Published on

ஈரோடு:

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு ஒன்றிய அரசின் விலை ஆதரவு திட்டத்தில் ஈரோடு விற்பனை குழுவின் கீழ் செயல்படும் அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்தூர்,

கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தியமங்கலம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், வெப்பிலி துணை விற்பனை கூடத்திலும் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடக்க உள்ளது.

அரசு நிர்ணயிக்கும் தரத்தில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60-க்கும், ஒரு கிலோ பந்து கொப்பரை, ரூ.117.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முகப்பு, சிட்டா, அடங்கல் நகலுடன், ஈரோடு விற்பனை குழு தலைமை அலுவலகம் – 0424-2339102,

அவல்பூந்துறை – 0424-2331279, பவானி – 98946 26295, பூதப்பாடி – 0456-227070, எழுமாத்தூர் – 79040 62073, கோபி – 04285-222278, கவுந்தப்பாடி – 04256-298856,

கொடுமுடி – 04204-224297, மைலம்பாடி – 99425 06990, சத்தியமங்கலம் – 04295-233346, சிவகிரி -04204- 240380, வெப்பிலி துணை விற்பனை கூடம் 04294-220512 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com