search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New electricity connection"

    • காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
    • அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது ஒருவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

    மேலும் கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜி.ஐ.எஸ்.எஸ்.) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.

    மேலும் பழுதடைந்த மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும் என புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    • சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இதில், பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனைத் தொடா்ந்து, வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தலைமையில் பழங்குடி கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சா் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேம்புக்கரை பழங்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டா் வரை சாலை அமைத்தால் இப்பகுதி மக்கள் பா்லியாறு வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வசதியாக இருக்கும்.

    ஆனால், இடையில் ெரயில்வே தண்டவாளம் இருப்பதால், சாலை அமைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து ெரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்து வந்த 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, தி.மு.க பொதுக்குழுஉறுப்பினர் காளிதாஸ், செல்வம், குன்னூர் நகர துணை செயலாளர் வினோத்குமார், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    ×