search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new course"

    • அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி வரும் கல்வியாண்டில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், டிரோன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வரவால் அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற சவால்களை தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய கண்டுபிடிப்புகளை வைத்தே எதிர்கொள்ள இயலும்.அதன்படி வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி பிரிவில், பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள் வரும் கல்வியாண்டு துவங்கவுள்ளன.

    இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில் வேளாண் துறையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயன்பாடு அவசியம். அதற்காக, வேளாண் மாணவர்கள் தயாராகவேண்டியது அவசியம். பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பாடத்திட்டம் நவீன தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி அறிமுகப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.பி.டெக்., பிரிவு அறிமுகப்படுத்தலாமா அல்லது எம்.டெக்., அறிமுகப்படுத்தி அனைத்து வேளாண் மாணவர்களும் இதில் சேரும் வகையில் செய்யலாமா, இரண்டும் அறிமுகப்படுத்தலாமா போன்ற ஆலோசனையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது என்றார்.

    • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.

    கோவை:

    கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டி ற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானி க்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புரோடக்ஷன் என்ஜினீயரிங், இ.சி.ஜி டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதற்கு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் சேர பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர பட்டய சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ 2 வருடம் இருக்க வேண்டும். இது 4 ஆண்டு படிப்பாகும்.

    இந்த படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.150, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் விண்ணப் பணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 8-ந் தேதி கடை நாளாகும்.

    மேலும், கோவை பீளமேடு அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் பிரிவு தமிழ் வழியில் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.சி. ஜி டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் உள்ளன.

    இவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும். தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.2,500க்கு கீழ் இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தெரிவித்தார்.

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2017-18 ஆம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டன.

    பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிப்பதால் மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும் என்றும் இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    மேற்காணும் அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி. ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (27-ந்தேதி) அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய அரசாணையினை தமிழக அரசின் இணையதளத்தில் ( www.tn.gov.in ) உயர்கல்வித் துறையின் கீழ் காணலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை இக்கல்வியாண்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    ×