search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new classroom building"

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் உள்ள காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை சார்பில் தாட்கோ நிதியில் ரூ.41 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைகள், 18 வது வார்டு காரை வண்ணாரப்பேட்டை ரோடு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், ஆணையாளர் விநாயகம்,துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் பள்ளி தலைமைஆசிரியர் கணபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செழியன், நகரமன்ற உறுப்பினர்கள் குமார், வினோத், கிருஷ்ணன், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சி,பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.

    அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது முதல்-அமைச்சர்

    மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து கட்டுமான பணிக்கான செங்கலை எடுத்து வைத்தார். முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் பூங்கொத்துடன் அணிவகுத்து நின்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    புதிய வகுப்பறை

    இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர் கந்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராய ணன், தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி மாண வர்கள் சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நெய்வேலி சட்ட மன்ற தொகுதி, பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இட பற்றாக்குறை உள்ளதால் புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பட்டு, திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திரு சபா.ராேஜந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வட்டார கல்வி அலுவலர் செல்வம்,பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், சேட்டு, ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதாஞானசேகரன், ஒன்றிய விவசாய அணி செந்தாமரை, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொமுச பேரவை துணை தலைவர் வீரராமச்சந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வகுமார், ஏழுமலை, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி, ஒப்பந்ததாரர் நித்தியநந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×