ராணிப்பேட்டையில் பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம்

அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது
ராணிப்பேட்டையில் பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகரில் உள்ள காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை சார்பில் தாட்கோ நிதியில் ரூ.41 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைகள், 18 வது வார்டு காரை வண்ணாரப்பேட்டை ரோடு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், ஆணையாளர் விநாயகம்,துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் பள்ளி தலைமைஆசிரியர் கணபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செழியன், நகரமன்ற உறுப்பினர்கள் குமார், வினோத், கிருஷ்ணன், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com