என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Bharat Literacy Project"

    • புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கோலப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு திறன்மேம்பாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டார வளமைய கட்டிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கோலப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு திறன்மேம்பாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், ஆசிரியர்கள் சிவராமன், டேவிட்ஞானராஜ், செந்தூர்பாண்டி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் செய்திருந்தனா்.

    • சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • தொடர்ந்து இந்த புதிய திட்டம் குறித்து விளக்கி பயன்பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித்தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார்.

    தென்காசி:

    சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் எஸ்.எஸ்.எம். செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெண்கள் அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த புதிய திட்டம்குறித்து விளக்கி பயன் பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித் தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மரிய செல்வம் சிறப்பு விருந்தினர் செல்வகுமாருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஆசிரியர் சுகந்தி வரவேற்று பேசினார். கீதா தன்னார்வலராக பங்கேற்றார்.

    ×