search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Dakshinamara Nadar Sangam College"

    • கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
    • கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியல் முதுகலை வேதியியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி போட்டி 'இளம் விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ராஜன் தலைமை தாங்கி அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் கண்காட்சிக்கு கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    இக்கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலின்படி முதுகலை வேதியியல் துறை பேராசிரியர்கள் லூர்து புஷ்பராஜ், கார்த்திகேயன், குளோரி புனிதா, மற்றும் முதுகலை வேதியியல் துறை மாணவ- மாணவிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நாகர்கோவில் சுரக்‌ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
    • சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு வள்ளியூர் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மகளிர் குழு சார்பாக இளமை பருவத்தின் சவால்கள் மற்றும் பாலின துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சுஜா பிரேம ரஜினி வரவேற்று பேசினார்.

    நாகர்கோவில் சுரக்ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர். மாணவ-மாணவிகளுக்கு இளம் பருவத்தில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்கள், உடலை பேணும் முறைகள், பாலின வன்கொடுமைகளை தடுத்தல், சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல், மாணவர்களின் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளும் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.

    இதில் நாகர்கோவில் சுரக்ஷா மையத்தின் பொரு ளாளர் அனிதா நடராஜன், குழு உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணன், நாகர்கோவில் நகராட்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமா செல்வன், சி.பி.ஐ.யின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திரன் சிவராம பிள்ளை, டாக்டர் கிருஷ்ண சுரேந்திரா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ஆலோசனைகள் வழங்கப்பட்டடு அவர்களது பிரச்சினைகள் கேட்டறிந்து தீர்வுகளும் கூறப்பட்டன. மகளிர்குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

    ×