search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural Resources"

    • ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும் சான்றி தழ்களை வழங்கினார்.

    கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்பட 5 ஊர்களில் நடத்தப்பட்டு இறுதியாக ராஜபாளை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நினைவு சுழற் சின்னம் (செங்கோல்) வழங்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சரின் பார்வைக்கு அவர் அனுப்பி வைத்தார்.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கை வளங்களை பாதுகாத்து நமது பாரம்பரிய விலங்கான யானைகளை பாதுகாப்பது அனை வருடைய கடைமையாகும். ராஜபாளையம் தொகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறு வதற்கு வசதியாக ராஜபா ளையம் தொகுதிக்கு தனி யாக புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் படும் பணிகள் மருத்துவ மனையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் துணைவியார் நிர்மலா ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு நல்லபல திட்டங்களை செயல் படுத்திக் கொண்டு வரு கிறார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலா, நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.
    • வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்கால்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் அருண்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×