search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Disaster Rescue Force"

    கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Gaja #GajaCyclone
    அரக்கோணம்:

    வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒரு குழுவிற்கு 27 பேர் வீதம் 10 குழுவினர் மழை, புயல் ஆகியவற்றினால் ஏற்படும் இடர்பாடு காலங்களில் உதவி செய்வதற்காக மொத்தம் 270 பேர் உதவி கமாண்டர் ராஜன்பாலு தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மீட்பு படையினர் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, ராமநாதபுரம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

    மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். #Gaja #GajaCyclone
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர். #HeavyRain
    அரக்கோணம்:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



    அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.

    மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    நாடு முழுவதும் வெள்ள நிலைமையை சமாளிப்பதற்காக 71 இடங்களில் 97 குழுக்களை தேசிய பேரிடர் மீட்பு படை பணி அமர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது.
    புதுடெல்லி:

    மராட்டியம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பருவ மழை வெளுத்துக்கட்டி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

    பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போய் உள்ளது.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளையும், மீட்பு பணிகளையும் கவனிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.), நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 71 இடங்களில் தனது 97 குழுக்களை பணி அமர்த்தி உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 45 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

    மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, மத்திய நீர் ஆணையம் உள்ளிட்ட பிற அமைப்புகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

    படைப்பிரிவின் கமாண்டர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

    மழை, வெள்ளத்தால் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க ஏற்றவிதத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்திகளை வகுத்து செயல்படுத்த தயாராக உள்ளனர்.

    நாட்டின் பல மாநிலங்களிலும் மழை, வெள்ள நிலவரத்தை டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    பருவ மழை, வெள்ளம் காரணமாக பேரழிவின் தாக்கத்தை குறைக்கிற வகையில் தேசிய பேரிடர் மீட்பு படை செயல்படும். அதற்கு ஏற்ப மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை அமர்த்தி உள்ளது.



    ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள இடங்களை, அங்கு உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து அடையாளம் கண்டு, தேசிய பேரிடர் மீட்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் பாதித்த மாணிக்பூரில் இருந்து 68 பேரும், நலசோப்ரா மற்றும் பால்கரில் இருந்து 411 பேரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
    ×