என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nandeeswarar"

    • நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார்.
    • நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும்.

    சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்கங்களுக்கு விளக்கமளிப்ப வரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது… மெத்தப் படித்திருந்தாலும், நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது.

    அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானின் தொல்லைகள் தீரும். நந்தி குருவடிவானவர். சிவபெருமான் நந்திக்கு உபதேசம் செய்தார். நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே இந்த உலகத்தில் முக்தி அடைய விரும்பும் ஆன்மாக்கள் நந்தியை வழிபட வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

    பிரதோஷ நேரத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பரிசி நெய் விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும். சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்குப் பசும்பால் வாங்கித் தந்து வழிபடுவது சிறப்பு. நந்திக்குப் பஞ்சாமிருதம் செய்யப் பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நம் வறுமை நீங்கி செல்வ வளம் சேரும். நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும். இளநீர் சமர்பித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    நல்லெண்ணையில் விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கி சுகமான வாழ்வு கிடைக்கும். ஆலயங்களுக்கு நல்லெண்ணை தானமாகக் கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை அடையலாம். குறைந்தபட்சம் சில வில்வ இலைகளையாவது நந்திக்கு சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால் போதும். நந்தி உங்களின் வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேற அருள்புரிவார்.

    நந்தி தேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபா ராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

    • தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16- வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில், வடபூண்டி கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பழமலை நாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    ×