என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
    X

    நந்தீஸ்வரருக்கு பிரதோ ஷவழிபாடு நடைபெற்றது.

    தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

    • தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16- வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில், வடபூண்டி கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பழமலை நாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×