என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Na.Muthukumar"

    • தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
    • யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர்.

    தமிழ் திரையுலகின் எளிமையும் ஆழமும் கலந்த பாடல்களை பரிசளித்த கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார்  அவரின் மறைவு நாளில் ரசிகர்களாலும், திரைப்பட உலகினராலும் நினைவுகூறப்படுகிறார்.

    பெரும் ஞானம் கொண்ட உணர்வுகளை, மிக எளிய தமிழ்ச் சொற்களில் பாடலாக வடிப்பது. 2001-ஆம் ஆண்டு சீமான் இயக்கிய *வீர நடை* திரைப்படம் வழியாக பாடலாசிரியராக அறிமுகமானார். அதற்கு முன், இயக்குநர் பாலுமகேந்திரா-வின் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அங்கே தான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் வாழ்நாள் நட்பு உருவானது.

    திரையுலகில் தனது பயணத்தில், தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

    யுவன் – முத்துக்குமார் காம்போ

    தமிழ் சினிமாவின் எவர்கிரீன* ஹிட் பாடல்களை வழங்கிய கூட்டணி என்றால், அது யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர். நந்தா திரைப்படத்தில் முதன்முறையாக யுவன் இசைக்கு முத்துக்குமார் பாடல் எழுதினார்.

    'ஒரு நாளில்', 'என் காதல் சொல்ல', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'தேவதையை கண்டேன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'பறவையே எங்கு இருக்கிறாய்' போன்ற பல ஹிட் பாடல்களின் பின்னணியில் முத்துக்குமாரின் வரிகள் உள்ளன. கடைசியாக, யுவன் இசையில் *தரமணி* படத்திற்கு பாடல்கள் எழுதினார்.

    இயக்குநர் **செல்வராகவன்** இயக்கிய *காதல் கொண்டேன்*, *7ஜி ரெயின்போ காலனி*, *புதுப்பேட்டை* படங்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் பெரும் வெற்றி பெற்றது.

    இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக *கற்றது தமிழ்* மற்றும் *தங்க மீன்கள்* பாடல்கள் இன்றும் மக்களிடையே வாழ்கின்றன.

    மறைவுக்குப் பின் மரியாதை

    2016-ஆம் ஆண்டு, வெறும் 41 வயதில், மஞ்சள்காமாலை நோயால் நா. முத்துக்குமார் காலமானார். அவரது இழப்பை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை; அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

    அவரின் வரிகள் துவண்டுபோனவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி கொண்டவை. தனிமையில் வாடுவோருக்கு தோழனாக இருந்து, அவர்களின் மனங்களை நிம்மதிப்படுத்துகின்றன.

    • தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
    • நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடந்தது.

    தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.

    அண்மையில் இவரது 50-வது பிறந்தநாள் வந்தது. கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடந்தது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா, சிவகார்த்திகேயன், முத்துக்குமாருடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    அதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது " நான் முதன் முதலில் நெல்சன் அண்ணா படத்தில் பாடல் எழுதிய போது அதற்கான சம்பளத்தை நான் நா. முத்துகுமார் சாருடைய குடும்பத்திற்கு கொடுத்தேன். இது நான் செய்த உதவி அல்ல, நான் செய்ய வேண்டிய கடமை. இன்றும் நான் பாடல் எழுத போகும்போது அவருடைய 2 பாடல்கள் கேட்டுவிட்டு தான் எழுத செல்வேன். இன்று பல நல்ல பாடலாசிரியர்கள் இருந்தாலும் முத்துகுமார் சாரை போல் எழுத ஆளில்லை" என கூறினார்.

    • தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
    • சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்

    தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.

    சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்.பாடலாசிரியர் ஆவதற்கு முன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். அங்குதான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். தமிழில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

     

    குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் காம்போவில் வெளியான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கூட்டணியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. நந்தா படத்தில் முதன்முறையாக முத்துகுமார் யுவன் இசைக்கு பாடல் வரிகளை எழுதினார்.

     

    யுவன் இசையில் உருவான ஒரு நாளில், என் காதல் சொல்ல, , நினைத்து நினைத்து பார்த்தேன், தேவதையை கண்டேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பல வெற்றி பாடல்களுக்கு நா.முத்துகுமார் வரிகளை எழுதியுள்ளார். கடைசியாக யுவன் இசையில் தரமணி படத்திற்கு பாடல்களை எழுதினார்.

     

    செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நா.முத்துகுமார் வரிகளில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

    இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் நா. முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.

     

    குறிப்பாக இன்றும் கற்றது தமிழ், தங்க மீன்கள் பாடல்கள் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நா. முத்துகுமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அவரது பாடல் வரிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டில் மஞ்சள்காமாலை நோயினால் முத்துகுமார் காலமானார். தமிழ் திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை.

     

    கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள். தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.

    நா.முத்துகுமார் மக்களை விட்டு பிரிந்தாலும், அவருடைய வரிகள் இன்னும் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. பல துவண்டுப்போன மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது தனிமையில் வாடும் மனிதர்களுக்கு சக தோழனாய் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்..

    ×