search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton Keema Samosa"

    • மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
    • கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    சமோசா சீட்- 7 நம்பர்

    மட்டன் 250 கிராம்

    பச்சைமிளகாய்- 1 பொடிதாக நறுக்கியது

    தனியா விதை- 1 டீஸ்பூன்

    கரம்மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள்- கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)

    செய்முறை:

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். அதன் பச்சை வாசனை போன பிறகு அதில் 3 அல்லது 4 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு 250 கிராம் மட்டன் கொத்துக்கறி சேர்க்க வேண்டும். மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். சிறிதளவு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு , கரம்மசாலா தூள், பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து அனைத்து பொருட்களும் நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு இந்த மசாலா கலவையை நன்கு ஆற விட வேண்டும்.

    அடுத்து சமோசா சீட்டை எடுத்து கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலா கலவையை நிரப்பி மூடி விட வேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்து வைத்துள்ள சமோசாக்களை பொன்நிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மொறுமொறுப்பான மட்டன் கீமா சமோசா தயார்.

    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×