search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukhtar Abbas Naqvi"

    • குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக ஆலோசித்து வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று ராஜினாமா செய்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடையும் நிலையில் அவர் மத்திய அமைச்சவையில் இருந்து விலகி உள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியான குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஜக ஆலோசித்து வருகிறது. நூபுர் சர்மா விவகாரத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நக்வி சந்தித்து பேசினார்.

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அந்த பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    ‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. #ElectionCommission #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, கடந்த 3-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, ‘மோடியின் ராணுவம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவருக்கு மாநில தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதை நக்வி ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், அவரை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. அந்த உத்தரவில் தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-

    ராணுவம் தொடர்பாக தேர்தல் பிரசாரங்களில் பேசுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே கூறி இருந்தோம். அதையும் மீறி அப்படி பேசிய முக்தார் அப்பாஸ் நக்வியை எச்சரிக்கிறோம். எதிர்காலத்தில், அரசியல் பிரசாரத்துக்கு ராணுவத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #ElectionCommission #MukhtarAbbasNaqvi
    கோவாவில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசுகையில், 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை என தெரிவித்துள்ளார். #PMPost #MukhtarAbbasNaqvi
    பனாஜி:

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கோவாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியை வழங்கி வருகிறார்.

    பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. அதில் 20-க்கு மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர்.

    ஆனால், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. ஏனெனில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தெரிவித்தார். #PMPost #MukhtarAbbasNaqvi
    இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
    பனாஜி :

    கோவா மாநிலம், பானாஜியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் சமூகம், பொருளாதாரம், கல்வி மற்றும் மத உரிமைகளோடு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க ஒருசிலர் முயன்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

    ஏனெனில், பா.ஜ.க அரசு ஒருபோதும் வாக்குகளுக்காக மட்டுமே, சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களை செயல்படுத்துவதில்லை. பாகுபாடு இல்லாமல், கண்ணியமான முறையில் நாங்கள் சிறுபான்மையினர் நல திட்டங்களை செய்துவருகிறோம்.

    ஆனால், சிறுபான்மையினருக்கு நாட்டில் அச்சுறுத்தல் இருப்பது போன்று ஒரு சில அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்ற சிறு சிறு மத மோதல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் நாட்டில் பெரிதாக எந்த மத கலவரமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
    ×