என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muder"

    • மாயமான மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 63). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். முத்துசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கொளத்தூரில் உள்ள வீட்டில் மாரியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வாலிபர் ஒருவர், மாரியம்மாளிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார்.

    அப்போது, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. சம்பவத்தன்று மாரியம்மாளின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய, அவரை ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியம்மாளை காணவில்லை. இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாளின் மகன் ராஜ்குமார் கடந்த 18-ந் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று கொளக்காநத்தம் கிராமம் அய்யனாபுரம் பஸ் நிறுத்தம் அருகே காரை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்பதும், ஓடையில் உள்ள மறைவான பகுதியில் அந்த பெண்ணின் உடல் மீது மரக்கட்டைகளை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு, கரிக்கட்டையான நிலையில் கிடந்ததும் தெரியவந்தது.

    அந்த பெண் மாரியம்மாளாக இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாரியம்மாளின் உறவினரை வரவழைத்து, அடையாளம் காண செய்தனர். இதில் கருகிய நிலையில் இறந்து கிடந்தது மாரியம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, பெரம்பலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருச்சியில் இருந்து தடயவியல் போலீசார் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து மருவத்தூர் போலீசார், மாரியம்மாளின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாரியம்மாளை கொலை செய்த நபரை கைது செய்யும்வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரியம்மாளின் உறவினரான வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (வயது 45). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நகராட்சி முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், புஷ்பநாதனை வழிமறித்தனா்.

    இதனால் பதறிய அவர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட முயன்றார். அதற்குள் மா்மநபர்கள் அவரை மடக்கி அாிவாளால் நடுரோட்டில் வைத்து வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    பின்னர் மர்மநபர்கள், தாங்கள் வந்தமோட்டாா் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு புஷ்பநாதன் விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கிருந்தவர்களிடம் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள், புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உள்கட்சி பிரச்சனையில் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனுக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டரா? அல்லது புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாார்கள்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் காரணமாக வண்டிப்பாளையம் மற்றும் கடலூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

    • நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 46), அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி, கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்பட 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், செல்போன் டவர்கள், கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனின் செல்போன் போன்றவைகளில் ஆய்வு செய்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஓராண்டுக்கு 3 பேரும் சேர்ந்து ஆடுகளை திருடியுள்ளனர். இதனை அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்து உள்ளனர். திருடப்பட்ட ஆடுகள் கடலூர் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


    தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீசாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் புஷ்பநாதன் உதவி செய்யவில்லை. தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகியோர், கடந்த சில தினங்களாக புஷ்பநாதனை நோட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் 3 பேரின் வீடுகளை சூறையாடினர். மேலும், அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ள்தால், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

    ×