search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M.P. Ramadoss"

    • 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் புதுவை மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

    இதன் தொடக்கவிழா புதுவையின் விடுதலைக்கு வாக்கெடுப்பு நடந்த கீழூரில் நடந்தது. முன்னாள் எம்.பி. ராமதாஸ் தலைமை வகித்தார். வெங்கட்ராமன் வரவேற்றார்.

    தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜவன், முதன்மை பொறியாளர் ரவி, பேராசிரியை செல்வகுமாரி, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி ரகோத்தமன் வாழ்த்தி பேசினர்.

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    புதுவைக்கு 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.

    மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டியுள்ளது. மாநில அந்தஸ்து கிடைக்கும்போது தான் மத்தியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    சமூகநீதியோடு கூடிய விரைவான வளர்ச்சியை உருவாக்கி பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் வாழும் போதுதான் புதுவை அரசிலிருந்து விடுதலை கிடைக்கும். புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

    சிவராந்தகம் கிராம பஞ்சாயத்து தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     கிராமப்புற மக்கள் அரசின் இலவசத்தை நம்பி வாழாமல் உழைப்பின் மூலம் கவுரவமாக வாழ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2006-ல் கொண்டுவரப்பட்டது.

    புதுவை, காரைக்காலில் 108 கிராம பஞ்சாயத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    கடந்த 5 ஆண்டு புள்ளிவிபரப்படி புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. திட்டத்தின் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    கடந்த 5 ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். இது 100 நாள் வேலை திட்டம் அல்ல, 20 நாள் வேலை திட்டம். மத்திய அரசின் உன்னத கோட்பாடை புதுவை அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிர்ண யிக்கப்பட்ட கூலியையும் தரவில்லை. 5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து ரூ.ஆயிரத்து 548 கோடியை பெற்றிருக்க வேண்டும்.

    புதுவை அரசு செய்த தவறுகளால் மத்திய அரசு ரூ.112.49 கோடி மட்டும்தான் அளித்துள்ளது. இத்திட்டம் சரியான பாதையில் செயல்படுத்த உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். 108 பஞ்சாயத்திலும் திறமையான அலுவலரை நியமித்து பணிகளை பட்டியலிட்டு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் கடும் தாக்கு
    • மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோர் புள்ளி விபரத்தை சேகரிக்க அங்கன்வாடி ஊழியர்களை நியமித்துள்ளனர்.

    இது உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் ஒரு யுக்தியாகவும், தவறான அணுகுமுறையாகவும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க என்ன காரணங்களை கண்டறிய முடியுமோ, அதை கண்டுபிடித்து அதன்மூலம் தேர்தலை தள்ளி போடு வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மிக திறமை யானவர். இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியமானது.

    இப்பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    3 மாதத்தில் இப்பணியை செய்திருக்கலாம். ஆனால் முதல்-அமைச்சர் தனி நபர் ஆணையத்தை அமைத்து உள்ளாட்சிகளில் 33.5 சதவீதத்தை பிற்படுத்த ப்பட்டோருக்கு அளித்து அறிக்கையை 6 மாதத்தில் அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தனி நபர் ஆணையம் 13 மாதத்திற்கு பிறகு வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எல்லோ ருக்கும் தெரிந்த விஷயத்தை அறிவித்து ள்ளது.

    இப்போது 20 மாதத்திற்கு பிறகு அங்கன்வாடி ஊழியர்களால் பணி தொடங்கப்படுகிறது. இந்த பணி முடிவடைய இன்னும் 15 மாதங்களாகும். எனவே உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளாகும். அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்பதை முதல்-அமைச்சர் மகிழ்ச்சியோடு உறுதி செய்துள்ளார். பிரதமர் சொன்னாலும், இங்கே தேர்தல் நடத்தாமல், முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்த்துக்கொள்வார். இது அவரின் தலையாய அரசியல் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
    • புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வரும் நிதி மந்திரியை வரவேற்கிறேன். அவரின் வருகை புதுவை நிதி பிரச்சினைகளை தீர்த்து ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.

    பெரும் நிதி நெருக்கடியில் புதுவை சிக்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு புதுவையை மாநிலமாக தரம் உயர்த்துவதுதான். இப்போது அது சாத்தியப்படக்கூடியது அல்ல. மாற்றாக நிதி மந்திரி புதுவையை நிதிக்குழுவின் வரம்பில் கொண்டவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யூனியன் பிரதேச வருவாயில் குறைந்தபட்சம் 30 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களை 100 சதவீத நிதியோடு செலவு செய்ய முன்வர வேண்டும். புதுவை மாநில கடன் தொகை ரூ.11 ஆயிரத்து 556 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    நிதி பொறுப்பு, பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை உடனடியாக இயற்றும்படி சொல்ல வேண்டும். புதுவைக்கு உதவி செய்வதோடு பல நல்ல ஆலோசனைகளையும் மத்திய மந்திரி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 40, 243, அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் 73, 74, புதுகிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துச் சட்டம் 1973, புதுவை நகராட்சி சட்டம் 1973 ஆகியவை, புதுவையில், அரசு, கிராம பஞ்சாயத்துக்களையும், நகர மன்றங்களையும் அமைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு 29 பணிகளையும், நகர மன்றங்களுக்கு 18 பணி களையும் பிரித்துத் தர வேண்டும் என குறிப்பிடுகிறது.மேலும் இவற்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். நிதிக் குழு அமைக்க வேண்டும் என கூறுகின்றன. இதை செயல்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.

    கடந்த 55 ஆண்டுகளில்(1968-2023) ஒரே ஒரு முறை 2006-ல் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் புதுவையில் அடித்தள ஜனநாயகம் மலர முடியாமல் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தும் மத்திய நிதிக்குழுவிடம் இருந்தும் உள்ளாட்சி மானியங்கள் பெற முடியவில்லை.

    உள்ளாட்சிகளை மையமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடிய வில்லை. இதில் பணியாற்ற வேண்டிய ஆயிரத்து 74 உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை. அரசியல் அமைப்பு கடமைகளை செய்ய தவறிய கவர்னரின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.

    தன்னுடைய கடமை தவறிய போக்கினை அவர் புதுவை மக்களுக்கு உடனடி யாக விளக்க வேண்டும். தவறினால் அவர் மீது பதவி நீக்கம் உட்பட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.
    • ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் எம்.பி.சி. பிரிவு 2008-ல் தொடங்கப்பட்டது. அப்போது 4 பிராந்திய மீனவர்களும் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

    அதில் 20 சதவீதம் மீனவர் சமுதாய மாணவர்கள் பயன்பெற்றனர். அரசு எம்.பி.சியில் இருந்து இ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கி காரைக்கால் மீனவர்களின் கருத்தை கேட்காமல் அவர்களை இ.பி.சி.யில் சேர்த்தது.

    புதுவை, காரைக்கால் மீனவர்களையும் இ.பி.சி.யில் வைத்து அவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு செய்தது தான் காரைக்கால் மீனவருக்கு இழைத்த அநீதியின் அடித்தளம்.

    இதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.

    எம்.பி.சி.யில் வைத்திருந்தால் காரைக்காலுக்கான 18 சதவீதத்தில் ஒரு சில இடங்களையாவது பெற்றிருப்பர்.

    கடந்த 13 ஆண்டாக நிகழ்ந்து வரும் அநீதியை காரைக்கால் அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ கண்டு கொள்ளவில்லை. ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவர்களை இ.பி.சி.யில் இருந்து எம்.பி.சிக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.
    • புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்னையிலிருந்து புதுவை வழியாக கடலூருக்கு ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.

    புதுவை எம்.பி.யாக நான் இருந்தபோது மத்திய ரெயில்வே அமைச்சர்களாக இருந்த லல்லுபிரசாத்யாதவ், வேலு ஆகியோரிடம் கூறி திட்டத்திற்கு அனுமதி பெற்றேன்.

    2007-ல் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்து வந்த ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடந்தது. புதுவை அரசின் செயல்பாட்டால் இத்திட்டம் கிடப் பில் போடப்பட்டது. மத்திய அரசு இந்த ஆண்டும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.

    புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும். புதுவையில் உள்ள சில செல்வந்தர்களை திருப்திப்படுத்த அரசா ங்கம் நினைத்தால் இத்திட்டம் செயல்படாது. சிக்கல்களை கவர்னர் தீர்த்தால் திட்டத்திற்கு வழி பிறக்கும். இத்திட்டம் அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. இது மக்களுக்கு பயன்படும் வகையில் கவர்னர் செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.
    • கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். மாநில அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே நலத்திட்டங்களைக் கொண்டு வர முடியும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    மாநில அந்தஸ்து பெறுவது பற்றி உறுதியாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக முதல்-அமைச்சர் இறங்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

    கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அமைச்சரவையில் மாநில அந்தஸ்து பற்றி ஒருமனதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒருவேளை அவரின் சகோதரியான கவர்னர் மன உளைச்சலை தீர்த்து விட்டதால் முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து பற்றி இனிமேல் பேச மாட்டாரா?

    முதல்-அமைச்சர் நிலைப்பாடு தெரியாமல் புதுவையில் தேவையின்றி பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநில அந்தஸ்து கோரி போராட்டம், பந்த் என சொல்வது முதிர்ந்த அரசியலாக தெரியவில்லை. எல்லாம் நாடகமயமாகி வருகிறது. இது மாநில சட்ட ஒழுங்கை பாதித்து மக்களை பிளவுபடுத்தி மாநில அந்தஸ்துபிரச்சினையை திசை திருப்பும்.

    முதல்-அமைச்சருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதில் உண்மையான அக்கறை இல்லை என தோன்றுகிறது. அதிகாரிகளும், கவர்னரும் தனக்கு வேண்டிய காரியங்களில் ஒத்துழைத்தால் போதும் என்ற நிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது.

    மின்துறை தனியார்மய ஊழல், மதுபான தொழிற்சாலை ஊழல், குப்பை டெண்டர் ஊழல், சாலை ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் மாநில அந்தஸ்து அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் என மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

    எனவே எதையாவது முதல்-அமைச்சர் வெளிப்படையாக மக்களிடம் சொல்ல வேண்டும். புதுவை அமைதியாக வேண்டும். இல்லாவிட்டால் மாநில அந்தஸ்து நாடகத்திற்காக முதல்-அமைச்சர் சங்கரதாஸ்சாமி விருதை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டால் புதுவைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி அடிப்படை ஆழ்ந்த ஞானம் இல்லாமல் அவர் பேசியுள்ளார்.

    மாநில அந்தஸ்து என்பது ஒரு புனிதமான மகத்துவமான உரிமையை மக்களுக்கு அளிக்கக்கூடியது. அது ஜனநாயக , சமூக, பொருளாதார, கலாச்சார பண்புகளை உள்ளடக்கிய சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.

    மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவை மண்ணின் மைந்தர்களின் சொத்தாக மாறும். புதுவை யாருக்கும் அடிமை இல்லை என்ற நிலை மாறும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும். சட்டமன்றத்திற்கு தன்னாட்சி உரிமை கிடைக்கும். சட்டமன்றத்திற்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு ஏற்படும். நிதிநிலை பல வகைகளில் மேம்படும்.

    திட்டக்குழு, மாநில பணியாளர் ஆணையம், உயர்நீதிமன்ற கிளை. வரவு செலவு திட்டத்தை புதுவையிலேயே நிறைவேற்றுவது, சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவது, சுதந்திரமான வேளாண் கொள்கை தொழில் கொள்கை மூலதனக் கொள்கை, வீடு மற்றும் நிலக் கொள்கைகள், வறுமையையும் வேலையின்மையையும் தீர்ப்பதற்கான திட்டங்கள் போன்ற எண்ணற்ற நன்மைகள் மா நிலத்தில் கிடைக்கும். இவ்வளவு நன்மைகளையும் யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுவை அளிக்கிறதா என கவர்னர் நேர்மையாக விளக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×